tamilni 420 scaled
இலங்கைசெய்திகள்

ஜனவரி முதல் பெட்ரோலுக்கு வரி அறவீடு செய்ய தீர்மானம்

Share

ஜனவரி முதல் பெட்ரோலுக்கு வரி அறவீடு செய்ய தீர்மானம்

பெட்ரோலுக்கான பெறுமதி சேர் வரி 10.5 வீதத்தினால் அதிகரிக்கும் என ஜனாதிபதி செயலகத்தின் அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. எரந்த தெரிவித்துள்ளார்.

பெட்ரோலுக்கு இதுவரையில் அறவீடு செய்யப்பட்டு வந்த 7.5 வீத துறைமுக மற்றும் விமான நிலைய வரி ஜனவரி மாதம் முதல் நீக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து தொழிற்சங்கங்களை தெளிவுபடுத்தும் நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி 18 வீதம் அறவீடு செய்யப்பட உள்ளதுடன், பெட்ரோலுக்கு 10.5 வீத வரி அறவீடு செய்யப்படும் எனவும் எரந்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பெட்ரோல் டீசலுக்கான பெறுமதி சேர் வரி குறித்து ஆராய்ந்து வருவதாக மின்வலு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசசேகர அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...