tamilni 421 scaled
இலங்கைசெய்திகள்

குழந்தைகளிடையே பரவும் சுவாச நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை

Share

குழந்தைகளிடையே பரவும் சுவாச நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை

JN1 எனப்படும் கோவிட் மாறுபாடுடன் குழந்தைகளிடையே தற்போது பல சுவாச நோய்கள் பரவி வருவதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே ஆரோக்கியமான பழக்கங்களை மீண்டும் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

JN1 வகை கோவிட் மாறுபாடு இலங்கைக்கும் வரக்கூடும் என்றும், இந்த நாட்களில் இருமல் அல்லது சளி இருந்தால், முகக்கவசங்களை அணியுமாறும் தெரிவித்துள்ளார்.

“இதேவேளை, இன்ஃப்ளூவன்ஸா நோயும் பரவிவரும் நிலையில், புதிய கோவிட் வழக்குகள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

பண்டிகை காலம் என்பதனால்,பயணம் செய்யும் போது அனைவரும் கவனமாக இருக்குமாறும் எச்சரித்துள்ளார்.

மேலும், குழந்தைகள் மருத்துவமனையில் இதுவரை கோவிட் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை எனவும், டெங்கு நோயாளர்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வயிற்றுப்போக்கு என்பது விடுமுறை நாட்களில் தினமும் காணப்படும் ஒரு நோய் எனவும், குழந்தைகளுக்கு சுத்தமான உணவு வகைகளை கொடுக்குமாறும் தீபால் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...