vaasu
அரசியல்இலங்கைசெய்திகள்

இடைக்கால அரசு: பின்னடிக்கும் கோட்டா! – இன்றைய சந்திப்பில் பேசவில்லை என்கிறார் வாசுதேவ

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில் முக்கியமான விடயங்கள் எதுவும் பேசப்படவில்லை என்று முன்னாள் அமைச்சரான வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்தார்.

இடைக்கால அரசு தொடர்பில் உறுதியான கலந்துரையாடல் இடம்பெறாமல் சந்திப்பு முடிவடைந்தது என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரம் அரசில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படுவதற்குத் தீர்மானித்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி இன்றிரவு சந்தித்தார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசை அமைக்குமாறு ஜனாதிபதியை நிர்ப்பந்திப்பதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பகல் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
marriage5872 1667871504
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

New Project 3 20
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க...

241009 Diego Garcia Tamils
அரசியல்இலங்கைசெய்திகள்

டியாகோ கார்சியாவில் இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை உறுதி: பிரித்தானியாவுக்கு மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்கும் நெருக்கடி!

இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்ததாக...

Screenshot 2025 12 18 075235
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச அறிவிப்புகள் சிங்களத்தில் மாத்திரம்: தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! – ஜனாதிபதிக்கு சம உரிமை இயக்கம் கடிதம்

அரசாங்கத்தின் அனர்த்த கால உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அரச அறிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாமை குறித்து...