17 3
இலங்கைசெய்திகள்

மோசடி வழக்கு: பிரதியமைச்சர் – மாநகர முதல்வரிடம் பெறப்படவுள்ள வாக்குமூலம்

Share

மோசடி வழக்கு தொடர்பாக, தொழில்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடுவெல மாநகர முதல்வர் ரஞ்சன் ஜெயலால் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்கிசை நீதவான் ஏ.டி. சதுரிகா டி சில்வா கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தொழிற்சங்க தேசிய தொழிலாளர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு கட்டிடத்தை, தொழிற்சங்க அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் மோசடி ஆவணங்களைப் பயன்படுத்தி 3.6 மில்லியன் ரூபாய்களுக்கு குத்தகைக்கு எடுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவை சந்தேக நபராகப் பெயரிடுமாறு பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பாக செய்யப்பட்ட கோரிக்கையின் மீது தீர்ப்பை வழங்குவதற்காகவே, இந்த வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் அமைச்சர் சமரசிங்கவிடமிருந்து ஏற்கனவே பெற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் 2025 ஜூலை 25 ஆம் திகதி வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...