COVID 19 VACCINE 6757
இலங்கைசெய்திகள்

நாட்டில் 12–18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி!

Share

தற்போது நாட்டில் 20 – 29 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 12 – 18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பாடசாலைகள் திறக்கப்படவில்லை.

இதனால் பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்க 12–18 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சூம் ஊடாக மேற்கொண்ட கலந்துரையாடலேயே சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்தினருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. அதேபோல் மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நிறைவடைந்துவிட்டால் பாடசாலைகள் விரைவில் திறக்கப்படும்.

இதேவேளை 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் முதலாவது தடுப்பூசியை 34 சதவீதமானோரும் இரண்டாவது தடுப்பூசியை 12 சதவீதமா​னோரும்  இதுவரையிலும் பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...