ஹேமந்த ஹேரத் 666
இலங்கைசெய்திகள்

தடுப்பூசி நிலையங்கள் தொடர்ந்து இயங்காது!!!! – அமைச்சு அறிவுறுத்து

Share

எதிர்வரும் காலங்களில் தடுப்பூசி ஏற்றப்படும் மையங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என சுகாதார சேவைகள் பணியாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்துக்குள் தடுப்பூசியை பெற வேண்டும். அதனால் அருகில் உள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் சென்று தடுப்பூசிகளை பெறுமாறு நட்டு மக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த வயதுடையவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு தொடர்ந்து தடுப்பூசி நிலையங்களை இயங்கவைக்க முடியாது. அதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டு காலக்கெடு வழங்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் தடுப்பூசி ஏற்றத் தொடங்கி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் வீடுகளுக்கு அருகில் சென்று தடுப்பூசி போடுவதற்கு பதிலாக ஒரு சில முக்கிய மையங்களில் மட்டுமே தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.

எனவே கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதால் தற்போது செலுத்தப்படும் தடுப்பூசிகளை விரைவில் பெறுமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...