அமெரிக்காவில் கற்கும் இலங்கை மாணவியின் நெகிழ்ச்சியான செயல்
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவில் கற்கும் இலங்கை மாணவியின் நெகிழ்ச்சியான செயல்

Share

அமெரிக்காவில் கற்கும் இலங்கை மாணவியின் நெகிழ்ச்சியான செயல்

பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள 5 பாடசாலைகளுக்கு, அமெரிக்க பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவி ஒருவர் மடிக்கணினி மற்றும் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இலங்கை மாணவர்கள் பொருளாதாரச் சிரமங்களினால் கல்விச் செயற்பாடுகளில் எவ்வாறு நெருக்கடிகளை சந்திக்கின்றார் என்பதை ஊடகங்கள் ஊடாகப் பார்த்த பின்னரே தாம் இதற்கான முயற்சியை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரவளையில் உள்ள 5 பாடசாலைகளுக்கு 10 லட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணினிகள் மற்றும் புத்தகங்களை அவர் வழங்கியுள்ளார்.

அமெரிக்க பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவியான 17 வயதான செனுலி பீரிஸ் என்பவரே இந்த அன்பளிப்பை வழங்கியுள்ளார்.

பாடப் போட்டியில் முதலிடம் பெற்றதன் மூலம் பெற்ற 5 லட்சம் ரூபாவும், அமெரிக்க மாணவி ஒருவரிடமிருந்து பெறப்பட்ட மேலும் 5 லட்சம் ரூபாவும் சேர்த்து இந்த நன்கொடையை வழங்கியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...