24 66112a8108738
இலங்கைசெய்திகள்

இலங்கையுடன் ஈடுபாட்டைப் பேண விருப்பம் தெரிவித்துள்ள அமெரிக்கா

Share

இலங்கையுடன் ஈடுபாட்டைப் பேண விருப்பம் தெரிவித்துள்ள அமெரிக்கா

வெள்ளை மாளிகையின் (White House) தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பை ஒத்துழைப்புடன் தொடர்வதற்காக இலங்கையுடன் அமெரிக்காவின் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பேணுவதில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வெள்ளை மாளிகை அறிக்கையின்படி, இந்த வார தொடக்கத்தில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடனான (Sagala Ratnayaka) தொலைபேசி உரையாடலின் போது ஜேக் சல்லிவன்(Jake Sullivan) இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அமெரிக்க ஆதரவு உட்பட இருதரப்பு ஈடுபாடுகள் குறித்து அவர்கள் உரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி, மற்றும் ஆளுகை கூறுகளை நிறைவு செய்வதற்கான இலங்கையின் தற்போதைய முயற்சிகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் சல்லிவனும் ரத்நாயக்கவும் கலந்துரையாடியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...