WhatsApp Image 2022 10 27 at 2.15.02 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

அமெரிக்க துணைத்தூதுவர் – கூட்டமைப்பினர் சந்திப்பு

Share

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, இலங்கைக்கான அமெரிக்க துணைத்தூதுவருக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் (2022.10.26) நடைபெற்றுள்ளது.

இதன்போது நாட்டின் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும், தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ‘ஒருவருட காலத்துக்குள் அரசியல் தீர்வு’ என அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்தை மேற்கோள் காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ஜனாதிபதியின் கூற்று நடைமுறைச் சாத்தியமானதாக இருந்தால் அது ஒற்றையாட்சிக்குள்ளான தீர்வாகவே அமையும், அத்தகைய தீர்வு ஒருபோதும் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வாக அமையாது. மாறாக அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள சமஸ்டி முறையோ அல்லது இந்தியாவில் நடைமுறையிலுள்ள மொழி அடிப்படையிலான மாநில சுயாட்சி முறையோ தான் தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வாக அமையும் என்றும், அது அமெரிக்காவினதும், இந்தியாவினதும் நேரடித் தலையீடற்று நிகழாது என்றும், அரசியல் தீர்வு விடயத்தில் ஈழத்தமிழர்கள் மனச்சோர்வுற்று, தம்மைத்தாமே மலினப்பட்ட, பெறுமதியற்ற இனமாக கருதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம், அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் அரசியல் அலுவலர், ‘இறுதிப் போரின்போது விடுதலைப் புலிகளும் பல தவறுகளையும் குற்றங்களையும் புரிந்துள்ளனரே, அதுபற்றிய தங்களின் நிலைப்பாடு என்ன?’ என கேள்வியெழுப்பியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த சிறீதரன்,

அது ஒரு இனவிடுதலை கருதிய அறப் போராட்டம், ஆனால் ஒரு இனத்தின் விடுதலைக்கான இயலுமைகள் எல்லாவற்றையும் இழந்து கையறு நிலையில் நின்றபோது, தவிர்க்க முடியாத சிலமுடிவுகளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருக்கலாம், அந்த நோக்குநிலையில் நின்று பார்த்தால் அதிலுள்ள நியாயப்பாடுகளைப் புரிந்துகொள்கின்ற காலம் வரும். அமெரிக்கா, நெல்சன் மண்டேலாவுக்கெதிராக விதித்த தடையை மீளப்பெற்றது போல, ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தடைசெய்யப்பட்ட தலிபான்களிடமே மீள ஒப்படைத்ததைப்போல, சில நாடுகள் விடுதலைப்புலிகள் மீதான தடையை தற்போது நீக்கியுள்ளதைப் போல எதிர்காலத்தில் நிலைமை மாற்றமடையும் எனத் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Pregnant Child 1200px 25 07 18 1 1000x600 1
செய்திகள்இலங்கை

கர்ப்பிணித் தாய்மார்கள் போதைப்பொருள் பாவனை: குழந்தைகளின் அபாயம் குறித்து அமைச்சர் சரோஜா போல்ராஜ் எச்சரிக்கை!

சமீபகாலமாகப் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...