24 65ff9cac7568e
இலங்கைசெய்திகள்

மாபெரும் மக்கள் கூட்டத்தின் பங்கேற்புடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம்

Share

மாபெரும் மக்கள் கூட்டத்தின் பங்கேற்புடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தை மருதானை சந்தியில் பிரமாண்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பேரணியை சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு முன்னர் ஆலோசிக்கப்பட்ட போதிலும், மருதானை மண்சந்தி டவர் ஹால் தியேட்டருக்கு அருகில் மே தினக் கூட்டத்தை நடத்துவது பொருத்தமானது என கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தில் அமைப்பாளர்கள் தலா அறுபது பேருடன் மே தினக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியானது மாபெரும் மக்கள் கூட்டத்தின் பங்கேற்புடன் மே தினத்தை நடத்தவுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...