12 30
இலங்கைசெய்திகள்

ஐ.தே.கவை அழிக்க இடமளியோம்! ரவி கருணாநாயக்க எம்.பி. திட்டவட்டம்

Share

ஐ.தே.கவை அழிக்க இடமளியோம்! ரவி கருணாநாயக்க எம்.பி. திட்டவட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு சிலர் பணயக் கைதியாகப் பயன்படுத்த முற்படுகின்றனர். எனினும், கட்சியை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர் நான்தான். எனவே, ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காகக் கட்சியை அழிக்க இடமளிக்க முடியாது.

மக்களின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்க வேண்டும். கட்சியை விட்டுச் சென்றவர்களும் மீள வரவேண்டும். ஒரு சிலருக்காக எமது கட்சியைப் பணயக் கைதியாகப் பயன்படுத்த இடமளிக்க முடியாது.

இந்த நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய கட்சியே ஐக்கிய தேசியக் கட்சியாகும். அக்கட்சியை பழைய நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டள்ளார்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...