GANESH
அரசியல்இலங்கைசெய்திகள்

பல்கலை மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்!

Share

” ஜனநாயக வழியில் போராடிய, போராட்டக்காரர்கள்மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது பாரதூரமான விடயமாகும். எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்.” – என்று மலையக சிவில் அமைப்புகளின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

அட்டனில் இன்று (23.08.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்படி கூட்டமைப்பின் தலைவர் கணேசலிங்கம் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. மக்கள்மீது சுமைகள் திணிக்கப்பட்டன. எனவே, நாட்டை மீட்கவும், அரசியல் மற்றும் ஜனநாயக மறுசீரமைப்புகளை கோரியுமே மக்கள் வீதிகளில் இறங்கினர். ஜனநாயக வழியில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதன் விளையாக முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு பதவி விலக வேண்டி ஏற்பட்டது.

போராட்டத்தால்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார். எனினும், பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி, போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு அவர் அனுமதி வழங்கியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களும் அந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட வேண்டியவர்கள் சுமந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் நீதிக்காக போராடியவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். எனவே, கைதுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்களை தண்டிக்கலாம். ஆனால் ஜனநாயக வழியில் போராடியவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

அதேவேளை, மலையக சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். பொருளாதார சிக்கலை பயன்படுத்தி, மலையக சிறார்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறுமி ரமணியின் மரணத்தை சாதாரணமாக கருதிவிட முடியாது. ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...