us
இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பம்!

Share

நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட  பல்கலைக்கழகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இவ்வாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், 30 வயதுக்கு குறைவான கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள், பல்கலை மாணவர்கள் ஆகியோருக்கு விரைவில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்குமாறு சகல பல்கலைக்கழங்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தடுப்பூசி செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அனைத்து பல்கலைக்கழக சுகாதாரத்துறையினர் மற்றும் துணைவேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழகத் தரப்பினருடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்தே பல்கலைக்கழகங்கள் விரைவில் மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது – எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...