image 760538e412
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி: சமூக ஊடகங்களில் பொய்யான விபரங்கள்

Share

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி: சமூக ஊடகங்களில் பொய்யான விபரங்கள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றியீட்டுவார்கள் என்பது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் விபரங்கள் பொய்யானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் இந்த விடயம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கைக் கிளையின் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த சமூக ஊடகப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவலின் பிரகாரம் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி வகிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மொட்டு கட்சி அடுத்த இடத்தையும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி மூன்றாம் இடத்தையும், நான்காம் இடத்தை அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேசிய மக்கள் சக்தியின் வாக்குகள் 339 வீதத்தினால் வளர்ச்சியடையும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், ஐக்கிய நாடுகள் அமைப்பு இவ்வாறான ஓர் கருத்துக் கணிப்பை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கைக் கிளையினால் இவ்வாறான ஓர் அறிக்கை வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின் போதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கைக் கிளையினால் கருத்து கணிப்பு நடத்தப்பட்டமைக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...