2 1
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு வெளியான அறிவிப்பு

Share

உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு வெளியான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சையின் மீள் கணக்கெடுப்பு முடிவுகள் மற்றும் இடைநிறுத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்ற பரீட்சார்த்திகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2023/2024 கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உரிய விண்ணப்பங்களை இன்று (01) முதல் ஒக்டோபர் 08 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் அனுப்ப முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.ugc.ac.lk) 2023/2024 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதி தொடர்பான விண்ணப்பங்களுக்கான அழைப்பு தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் விண்ணப்பங்களை அனுப்புவது தொடர்பான மேலதிக விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023/2024 கல்வியாண்டுக்கான விண்ணப்பதாரர்களுக்கு பாடநெறிகளுக்கான முன்னுரிமை வரிசையை மாற்றுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட இரண்டு வார கால அவகாசம் இந்த சந்தர்ப்பத்திற்கு பொருந்தாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...