banthula
இலங்கைசெய்திகள்

தேசிய மட்டத்தில் உள்ளாடை உற்பத்தி – சதொச ஊடாக விற்பனை!!

Share

தேசிய மட்டத்தில் உள்ளாடை உற்பத்தி – சதொச ஊடாக விற்பனை!!

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் 623 அத்தியாவசியமற்ற பொருள்களின் உத்தரவாத தொகையை அதிகரித்தமையால் உள்ளாடை பாவனைக்கு தட்டுப்பாடு மற்றும் விலை என்பவை அதிகரிக்கப்படாது.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யும் உள்ளாடைகளை சதொச விற்பனை நிலையம் ஊடாக குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணியை அதிகரிக்கவே இறக்குமதி செய்யும் 623 பொருள்களின் உத்தரவாத விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை இறக்குமதி செய்ய தடைவிதிக்கவில்லை.
தற்போது சமூக வலைத்தளத்தில் உள்ளாடைக்கு தட்டுப்பாடு ஏற்படப் போகிறது என கீழ்த்தரமாக பதிவிட்டு வருகின்றனர்.

இவ்வாறான பதிவுகள் இலங்கையின் தேசிய மட்டத்திலான ஆடைத்தொழில் துறையை அவமதிப்பனவாக உள்ளன. அத்துடன் இலங்கை ஆடைகளுக்கு உலக சந்தையில் அதிக கேள்வி நிலவுகிறது. தேசிய மட்டத்தில் தைக்கப்படும் உயர்தர ஆடைகளை குறைந்த விலையில் மக்கள் பெறுகிறாகள்.

இலங்கையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு உலக சந்தையில் அதிக கேள்விகள் எழுகின்றன. இவ்வாறான நிலையில் உள்ளாடைக்கு பற்றாக்குறை என குறிப்பிடப்படும் பதிவுகள் மற்றும் கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.

நாட்டிலேயே பாவனைக்கு தேவையான உள்ளாடைகள் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன என பிரதான நிலை உள்ளாடை உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

எக்காரணம் கொண்டும் உள்ளாடைகளுக்கு தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு ஏற்படாது என்பதை தெரிவிக்கின்றேன்.

அத்துடன் சதொச விற்பனை நிலையம் ஊடாக உள்ளாடைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...