21 5
இலங்கைசெய்திகள்

துருக்கியில் தெருநாய்களுக்கு எதிரான சட்டம்: பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் எதிர்ப்பு

Share

துருக்கியில் தெருநாய்களுக்கு எதிரான சட்டம்: பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் எதிர்ப்பு

துருக்கியில் உள்ள தெருநாய்களைக் கொல்வதற்கு துருக்கி அரசாங்கம் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியதையடுத்து, பிரித்தானிய சுற்றுலா பயணிகள் அந்நாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

துருக்கி அரசாங்கத்தின் குறித்த நடவடிக்கை சர்வதேச அளவில் பாரிய எதிர்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், அனைத்து தெருநாய்களையும் கொல்ல சட்டம் பிறப்பிக்கப்படவில்லை எனவும் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களை கருணைக்கொலை செய்யவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் 4 மில்லியன் தெருநாய்கள் வசிப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், துருக்கி மக்களுக்கு பாதிப்பும், போக்குவரத்து இடையூறும், நோய் பரவுதலும் ஏற்பட்டுள்ளன.

எனினும், துருக்கி அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...