24 661366ae60789
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்கள் கைது

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் சுங்க வரி செலுத்தாமல் கொண்டுவரப்பட்ட 12 மடிக்கணினிகள் மற்றும் 55 மதுபான போத்தல்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்பிரிவு அதிகாரிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கைக்கு வந்த இரண்டு விமானப் பயணிகளின் பயணப்பொதிகள் சோதனையின் போது, பாதுகாப்பான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து வந்த இலங்கை வர்த்தகர்கள் இருவர் குறித்த பொருட்களை கொண்டு வந்துள்ள நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...