செய்திகள்இலங்கை

corona – வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொவிட் உறுதி!!

Share
Share

corona – வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொவிட் உறுதி!!

வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் வசிக்கும் 28 வயது இளைஞன் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் திடீர் சுகவீனமடைந்ததை அடுத்து, அவர் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆயினும் வைத்தியசாலை கொண்டுசெல்ல முன்னரே அவர் உயிரிந்துள்ளார்.

அதன்பின்னர் அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவருக்குத் தொற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகவீனம் காரணமாக வவுனியா, புளியங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்த 55 வயது நபர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் புளியங்குளம் வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்ப்பபட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

இவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்குத் தொற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...