24 663c40901a4de
இலங்கைசெய்திகள்

டயனாவிற்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள்

Share

டயனாவிற்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலி ஆவணங்களை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியமை தொடர்பில் வழக்குத் தொடரப்பட உள்ளது.

சட்டத்திற்கு புறம்பான வகையில் அமைச்சராக பதவி வகித்து மக்களின் வரிப் பணத்தை நீண்ட காலம் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக வலியுறுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலும் டயனாவிற்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட உள்ளன.

அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் நாடாளுமன்றில் அங்கம் வகித்தமை, மக்கள் வரிப் பணத்தை துஸ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட உள்ளது.

டயனா இலங்கை நாடாளுமன்றில் அங்கம் வகிக்கத் தகுதியற்றவர் என நேற்றைய தினம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...