24 663c40901a4de
இலங்கைசெய்திகள்

டயனாவிற்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள்

Share

டயனாவிற்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலி ஆவணங்களை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியமை தொடர்பில் வழக்குத் தொடரப்பட உள்ளது.

சட்டத்திற்கு புறம்பான வகையில் அமைச்சராக பதவி வகித்து மக்களின் வரிப் பணத்தை நீண்ட காலம் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக வலியுறுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலும் டயனாவிற்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட உள்ளன.

அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் நாடாளுமன்றில் அங்கம் வகித்தமை, மக்கள் வரிப் பணத்தை துஸ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட உள்ளது.

டயனா இலங்கை நாடாளுமன்றில் அங்கம் வகிக்கத் தகுதியற்றவர் என நேற்றைய தினம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 9
உலகம்செய்திகள்

டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு: கனடா காவல்துறையினர் தீவிர விசாரணை

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தை இலக்கு வைத்து, இன்று (மார்ச் 10)...

19 7
உலகம்செய்திகள்

ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் அமெரிக்கா: பென்டகன் முக்கிய அறிவிப்பு!

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 10) முன்னெப்போதும் இல்லாத வகையில்...

18 9
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: மார்ச் 15-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் விஜய்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரப்...

17 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்வதேச விமானக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: சுற்றுலாத்துறை கடும் பாதிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை பலமடங்கு...