வவுனியா மாவட்டத்தில் இன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த நபர்களில் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனையில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனை கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
மற்றையவர் சுகவீனம் காரணமாக வீட்டில் உயிரிழந்துள்ளார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Leave a comment