25 678e2535305ca
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்கவில் இருந்து நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள்: வெளியான காரணம்

Share

கட்டுநாயக்கவில் இருந்து நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள்: வெளியான காரணம்

போலி கடவுச்சீட்டில் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற இரண்டு ஆப்கானிஸ்தான் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (20) அதிகாலை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

கைது தொடர்பில் மேலும் தெரியவருகையில், “21 மற்றும் 23 வயதுடைய இருவர், கஜகஸ்தான் கடவுச்சீட்டுக்களுடன், குவைத்தில் இருந்து வந்துள்ளனர்.

பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்களின் பயண ஆவணங்கள், மேலதிக ஆய்வுக்காக எல்லை கண்காணிப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் சந்தேகநபர்கள் போலி கடவுச்சீட்டுடன் நாட்டிற்கு வருகை தந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த சந்தேகநபர்களை கைது செய்த அதிகாரிகள் அவர்களை, அதே விமானம் மூலம் குவைத்திற்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...