இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்கவில் இருந்து நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள்: வெளியான காரணம்

25 678e2535305ca
Share

கட்டுநாயக்கவில் இருந்து நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள்: வெளியான காரணம்

போலி கடவுச்சீட்டில் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற இரண்டு ஆப்கானிஸ்தான் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (20) அதிகாலை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

கைது தொடர்பில் மேலும் தெரியவருகையில், “21 மற்றும் 23 வயதுடைய இருவர், கஜகஸ்தான் கடவுச்சீட்டுக்களுடன், குவைத்தில் இருந்து வந்துள்ளனர்.

பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்களின் பயண ஆவணங்கள், மேலதிக ஆய்வுக்காக எல்லை கண்காணிப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் சந்தேகநபர்கள் போலி கடவுச்சீட்டுடன் நாட்டிற்கு வருகை தந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த சந்தேகநபர்களை கைது செய்த அதிகாரிகள் அவர்களை, அதே விமானம் மூலம் குவைத்திற்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...