31 4
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற குடும்பம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Share

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற குடும்பம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு குடும்பம் இரண்டு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலியான ஆவணங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டினை பயன்படுத்தி இத்தாலி செல்ல முற்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிரியாவை சேர்ந்த 7 பேர் கொண்ட இரண்டு குடும்ப உறுப்பினர்களே குடிவரவு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நோக்கி செல்லவிருந்த AI -282 விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது அவர்களின் கடவுச்சீட்டுகளில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து அதிகாரிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவை போலியான முறையில் தயாரிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் கடவுச்சீட்டுக்கள் துருக்கியிலுள்ள நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தலா 2000 அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளது.

ஸ்கேனர் டெஸ்ட், எலெக்ட்ரானிக் கேட்ஸ் போன்ற அதி நவீன சோதனைகளில் சிக்க முடியாத வகையில் உயர் தொழில்நுட்ப சிப்களை பயன்படுத்தி இந்த கடவுச்சீட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...