Jeevan Thondaman
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிரான பிரேரணை: இ.தொ.காவுக்குள் இழுபறி!

Share

அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்குள் இருவேறு நிலைப்பாடுகள் நிலவுகின்றன. இதனால் இறுதி முடிவெடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர், மக்களின் கோரிக்கையை ஏற்று, நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் நடுநிலை வகிப்பதே சிறந்தது, அந்த முடிவை இ.தொ.கா. மாற்றினால் அது எதிர்கால அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என மற்றுமொரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

இதனால் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் உறுதியான – இறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு காங்கிரசுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதான எதிர்க்கட்சி தம்முடன் பேச்சு நடத்தும்போது, தமது தரப்பு கோரிக்கைகளை காங்கிரஸ் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...