செய்திகள்இலங்கை

கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது!

Share
கஞ்சா
Share

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு படகில் கடத்தி வரப்பட்டுள்ள 41 மில்லியன் ரூபா பெறுமதியான 139 கிலோ கிராம் கஞ்சாவுடன் குறித்த இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர், சந்தேகத்துக்கிடமான வகையில் காணப்பட்ட படகை சோதனைசெய்ய முற்பட்டுள்ளனர். இதன்போது படகில் இருந்த சந்தேக நபர்கள் கஞ்சா அடங்கிய பொதிகளை கடலில் வீசியுள்ளனர்.

எனினும் கடற்படையினர் கடலில் வீசப்பட்ட கஞ்சா போதைப்பொருள்களை மீட்டதோடு, படகில் இருந்த இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகு ஆகியவையும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...