தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்றுக்கொண்டாலும் டெல்ரா தொற்று ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று பல்வேறு திரிபுகளில் உருக்கொண்டு அதிவீரியம்மிக்கதாக பரவலடைந்து வருகின்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு தொடர்பில் புதிய அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
வீரியம்கொண்ட இந்த டெல்டா வைரஸ் பரவல் தற்போது இலங்கையிலும் மிக வேகமாக பரவி வருகின்றது.
இதனை மேற்கோள்காட்டிஅறிக்கை வெளியிட்டுள்ள ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர,
டெல்டா கொரோனா திரிபுக்கு தடுப்பூசி உள்ளிட்ட நோய் எதிர்ப்பு கட்டமைப்பை கடந்து செல்லக்கூடிய ஆற்றல் உள்ளது.
எனவே த தடுப்பூசி ஏற்றிய பின்னரும், தொற்று உறுதியாவதை தவிர்ப்பதற்கு, அனைவரும் தொடர்ச்சியாக சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றவேண்டியது அவசியம் என் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment