நாட்டில் தற்போது மஞ்சள் தூளின் விலை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி 7000ரூபாவிலிருந்து 4500 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை உள்நாட்டு சந்தைகளில் அதிகரித்து காணப்பட்ட மஞ்சள் தூளின் விலையானது உள்ளூர் அறுவடைகள் சந்தைகளுக்கு கிடைக்கப்பெற்றமையை அடுத்து விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறே விதை மஞ்சள் கிலோ 1000 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
நாட்டில் வெவ்வேறு பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பெரும்பாலானோர் மஞ்சள் செய்கையிலும் ஈடுபட்டுள்ளனர் என ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment