202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிபொருள் நிலைய ஊழியரை பணயக் கைதியாக்கி எரிபொருள் பெற முயற்சி! – ஒருவர் கைது

Share

வரிசையில் காத்திருந்து எரிபொருள் கிடைக்காமையினால், அவ் எரிபொருள் நிலைய ஊழியரொருவரைப் பிடித்து பணயக் கைதியாக வைத்து, எரிபொருளைப் பெற முயற்சித்த போதிலும், அம் முயற்சி பயனளிக்கவில்லை.

பதுளை மாநகரின் எரிபொருள் நிலையமொன்றிலேயே, மேற்படி சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

மேற்படிச் சம்பவம் குறித்த முறைப்பாட்டையடுத்து, பதுளைப் பொலிசார் எரிபொருள் நிலைய ‘சி.சி.டி.வி’ கெமரா மூலம் பரிசீலனை செய்து, எரிபொருள் நிலைய ஊழியரை, பணயக் கைதியாக வைத்த ஒரு நபரை, பதுளைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து மேலும் இருவரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ் எரிபொருள் நிலையத்தில் அத்தியாவசியத் தேவைகள் கருதி, அரச திணைக்களங்களுக்கு மட்டும் எரிபொருள் வழங்கப்பட்டு வந்தன.

இந் நிலையில் தமக்கும் எரிபொருள் வேண்டுமென்று பொதுமக்கள் குழுவினர் கோரிக்கை விடுத்தும், அக் கோரிக்கை நிறைவேறாதலால், அந் எரிபொருள் நிலைய ஊழியரொருவரைப் பணயக் கைதியாக வைத்து, போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இப் போராட்டத்தினால் பிரதான பாதை வழி மறிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்களுக்கும் தடை ஏற்பட்டிருந்தது. இது குறித்த முறைப்பாட்டையடுத்து, பொலிசார் விரைந்து, போராட்டத்தினை கலைத்து, சி.சி.டி.வி. கெமரா மூலம் விடயங்களை பரிசீலனை செய்து ஒருவரைக் கைது செய்துள்ளதோடு, மேலும் இருவரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்திருந்தமையும், பணயக் கைதியாக இருந்த எரிபொருள் நிலைய ஊழியரையும் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...