25 683d9e89f25aa
இலங்கைசெய்திகள்

பைடன் கொலை செய்யப்பட்டார் – தற்போதிருப்பது யார்..! பகீர் கிளப்பிய ட்ரம்பின் பதிவு

Share

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியலில் சமீபத்தில் பகிர்ந்த பதிவொன்று அரசியல் மற்றும் ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

அந்த பதிவில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் (Joe Biden) 2020 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார் என்றும், தற்போது அவக்கு பதிலாக ஒரு க்ளோன் அல்லது இயந்திர மனிதன் செயல்பட்டு வருகிறான் என்பது போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த கருத்தை மற்றொருவர் எழுதியிருந்ததை ட்ரம்ப் தன் பக்கத்தில் பகிர்ந்ததன் மூலம், அதை உலகக் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

இந்த வகை கூற்றுகள் உண்மைக்கு புறம்பானவை மட்டுமல்லாமல், பொது மக்களை தவறாக வழிநடத்தும் அபாயமும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், இதைப் போன்ற சதி கோட்பாடுகளை பரப்புவது, ட்ரம்பின் பழைய அரசியல் நடைமுறையின் தொடர்ச்சியாகும் என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த காலங்களில் அவர் 2020 தேர்தலில் தான்தான் வென்றதாகவும், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பிறப்பிடம் குறித்தும் நம்பகத்தன்மை இல்லாத செய்திகள் பரப்பியிருந்தது நினைவுக்கூறத்தக்கது.

இந்த வகையான தகவல்கள் சமூக நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும், இவை அவசியமற்ற குழப்பங்களையும் சமுதாயப் பிளவுகளையும் உருவாக்குகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க அரசியலில் ஏற்கெனவே தவறான தகவல்களின் தாக்கம் அதிகரித்திருக்கும் சூழலில், ட்ரம்ப் மேற்கொண்ட இந்த செயல் மேலும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...