நாட்டில் திரிபோஷா மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
திரிபோஷா பற்றாக்குறை காரணமாக வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் போஷாக்கின்மையால் சிறுவர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுகிறது.
குறித்த பகுதிகளில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், தமக்கு ஒரு சில மாதங்களுக்கு மாத்திரமே திரிபோஷா வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, திரிபோஷா உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக திரிபோஷா உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது என லங்கா திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment