ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை
இலங்கைசெய்திகள்

இலங்கை டிரினிடாட் மற்றும் டொபாகோ இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை

Share

டிரினிடாட், டொபாகோ! ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை!

டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு அண்மையில் இலங்கையுடன் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை முறைப்படுத்தும் என்று டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் புதிய உயர் ஸ்தானிகர் கலாநிதி ரோஜர் கோபோல் தெரிவித்தார்.

டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் புதிய உயர் ஸ்தானிகர் கலாநிதி ரோஜர் கோபோல் நேற்று (03) பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை முறைப்படுத்துவதன் மூலம் வர்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுலா மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

புதுடில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து நாட்டின் விவகாரங்களை நிர்வகிக்கும் உயர் ஸ்தானிகர், ஜூன் மாதம் 30 ஆந் திகதி கண்டியில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்.

இதன்போது, இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணத் தொழில், கரும்பு மற்றும் ஏனைய விவசாயப் பொருட்கள் போன்ற புதிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உயர் ஸ்தானிகருடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இரு நாடுகளினதும் வெளிநாட்டு நிதிப் புலனாய்வுப் பிரிவுகளுக்கு இடையில், பணமோசடி செய்பவர்கள், பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பவர்கள் மற்றும் ஏனைய குற்றவியல் அமைப்புகள் பற்றிய தகவல்களைப் பாதுகாப்பாகப் பரிமாறிக் கொள்வதற்கு வசதியாக, டிரினிடாட் மற்றும் டொபாகோ நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் இலங்கை நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...