Sri Lanka Podujana Peramuna slpp 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சூழ்ச்சிக்காரர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்!

Share

சூழ்ச்சிக்காரர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்!

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து சூழ்ச்சிக்காரர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு, கட்சியின் தலைமையகத்தில் இன்று (01) நடைபெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் செயற்படும் குழுவை, அவர்களின் பெயர்களை பட்டியலிடாது – மறைமுகமாக சாடினார் , பஸிலின் சகாவான செயலாளர் சாகர காரியவசம். டலஸ் அணிக்கு ‘சூழ்ச்சிக் குழு’ எனவும் அவர் பெயர் சூட்டினார்.

” கட்சியிலிருந்து சென்ற சிலர், நிலைமையை உணர்ந்து எம்மிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். மீள வருவது குறித்து பேச்சு நடத்துகின்றனர். இவர்கள் குறித்து எமக்கு பிரச்சினை இல்லை. எனினும் சூழ்ச்சிக்ககாரர்கள் நீக்கப்படுவார்கள். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கட்சி என்ற அடிப்படையில் நாம் முன்னோக்கி பயணிப்போம். சூழ்ச்சிக்காரர்கள் யாரென்பது நான் பெயர் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. அவர்கள் யாரென்பதும், அவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் யாரென்பதும் மக்களுக்கு தெரியும்.” – என சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச இலங்கை பிரஜை. இங்கு வருவதற்கான உரிமை அவருக்கு உள்ளது. முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவே, அதில் எவ்வித மாற்றமும் கிடையாது. சூழ்ச்சிக்காரர்களே, தலைமைப்பதவியில் மாற்றம் கோருகின்றனர் எனவும் சாகர காரியவசம் கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 19
செய்திகள்இந்தியா

மதுரை மத்திய தொகுதி: தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக சுந்தர் சி களம்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம்பெற்றுள்ள புதிய...

Untitled 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி அரிசி இறக்குமதியில் நிதானம்: இறக்குமதியாளர்கள் சங்கம் விளக்கம்!

இலங்கையில் தற்போது புதிய நெல் அறுவடை சந்தைக்கு வந்துள்ள நிலையில், உடனடியாக அரிசி இறக்குமதிக்கு அனுமதி...

Untitled 17
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் புதிய போர்முனை: இஸ்ரேல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ (Operation Roaring Lion)...

Untitled 16
செய்திகள்விளையாட்டு

தமிழக சட்டமன்ற தேர்தல் – 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் த.வெ.க!

இந்தியாவின் தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம்...