Sri Lanka Podujana Peramuna slpp 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சூழ்ச்சிக்காரர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்!

Share

சூழ்ச்சிக்காரர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்!

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து சூழ்ச்சிக்காரர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு, கட்சியின் தலைமையகத்தில் இன்று (01) நடைபெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் செயற்படும் குழுவை, அவர்களின் பெயர்களை பட்டியலிடாது – மறைமுகமாக சாடினார் , பஸிலின் சகாவான செயலாளர் சாகர காரியவசம். டலஸ் அணிக்கு ‘சூழ்ச்சிக் குழு’ எனவும் அவர் பெயர் சூட்டினார்.

” கட்சியிலிருந்து சென்ற சிலர், நிலைமையை உணர்ந்து எம்மிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். மீள வருவது குறித்து பேச்சு நடத்துகின்றனர். இவர்கள் குறித்து எமக்கு பிரச்சினை இல்லை. எனினும் சூழ்ச்சிக்ககாரர்கள் நீக்கப்படுவார்கள். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கட்சி என்ற அடிப்படையில் நாம் முன்னோக்கி பயணிப்போம். சூழ்ச்சிக்காரர்கள் யாரென்பது நான் பெயர் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. அவர்கள் யாரென்பதும், அவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் யாரென்பதும் மக்களுக்கு தெரியும்.” – என சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச இலங்கை பிரஜை. இங்கு வருவதற்கான உரிமை அவருக்கு உள்ளது. முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவே, அதில் எவ்வித மாற்றமும் கிடையாது. சூழ்ச்சிக்காரர்களே, தலைமைப்பதவியில் மாற்றம் கோருகின்றனர் எனவும் சாகர காரியவசம் கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...