tamilni 22 scaled
இலங்கைசெய்திகள்

30 ஆண்டுகளில் சிறையில் சாந்தனை சந்திக்க சென்ற ஒரேயொரு நபர்!

Share

30 ஆண்டுகளில் சிறையில் சாந்தனை சந்திக்க சென்ற ஒரேயொரு நபர்!

30 ஆண்டுகளுக்கு மேல் செய்யாத குற்றத்திற்கு சிறையில் வாடிய சாந்தனை பார்க்க ஒருவர் தான் சென்றதாக திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”நான் சாந்தனை பார்க்க பலமுறை சென்றுள்ளேன். 30 ஆண்டுகாலத்திற்கு மேல் சிறையில் இருந்த அவரை பார்க்க ஒரேயொரு பார்வையாளர் தான் வருகை தந்தார். அவர் சாந்தன் கைது செய்யப்படும் போது பிறந்துகூட இருக்காத அவரது சகோதரியின் மகன்.

சாந்தனின் சகோதரியின் மகன் வெளிநாடு செல்லும் போது,கேரளா ஊடாக வேலூருக்கு சென்று சாந்தனை சந்தித்துள்ளார்.இதன்போது சாந்தன் என்னை பற்றி கூறியுள்ளார்.

அந்த வாலிபன் திருவானந்தபுரத்திற்கு சென்று அங்கிருந்து தொலைப்பேசி மூலம் என்னை அழைத்து உரையாடினார்.

இதன்போது ஐயா என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்,என்னால் உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எனது மாமா சாந்தன் உங்களை பற்றி நிறைய கூறினார். எனது மாமா யாரென்றே தெரியாமல் அவருக்காக நிறைய பேசியுள்ளீர்கள் ரொம்ப நன்றி என கூறினார்.

இப்படி 30 ஆண்டுகளில் சாந்தனை பார்க்க சென்ற ஒரேயொரு பார்வையாளர் இவர் தான். இவ்வாறு எந்த பாவமும் செய்யாமல் சபிக்கப்பட்ட ஒரு மனிதாக வாழ்ந்து தற்போது இறந்து போன சாந்தனின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என பிராத்திப்பதை தான் இந்த கையாலாகாத எங்களால் செய்ய முடியும்.

மேலும் சிறப்பு முகாம் என்பது சிறையைவிட மோசமானது.அங்கு மனிதர்களுக்கு நடக்க கூட அனுமதியில்லை. திருச்சி சிறப்பு முகாமில் நடக்கும் கொடுமைகளுக்கு அளவே இல்லை.

உலகிலே அஹிம்சை வழியில் சுதந்திரம் பெற்றது நம் இந்திய நாட்டில் சக மனிதர்களை உயிராக கூட மதிக்காமல் கேவலமாக நடத்தப்படும் இடம் சிறப்பு முகாம். இதை நினைத்து தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும்.

விடுதலையான பின்னரும் அவர் வெளிநாட்டவர் என்பதற்காக சிறப்பு முகாம் எனும் கொடுஞ்சிறையில் அடைத்தனர்.

சாந்தனின் உயிர் பிரிந்த பின்னராவது அந்த சிந்தனை மாறட்டும்,அரசின் கொள்கைகள் மாறட்டும், யாராக இருந்தாலும் சக மனிதனை மதிக்கின்ற அளவில் சட்டங்கள் திருத்தப்பட்ட வேண்டும்.

மாநில அரசின் கீழ் தான் சிறப்பு முகாம் உள்ளது. எனவே அவர்கள் நினைத்தால் இந்த நிலைமையை மாற்ற முடியும்.

மத்திய அரசோ மாநில அரசோ இந்த கொள்கைகளை மாற்றுவது ஒன்றுதான் சாந்தனின் மரணத்திற்கு கொடுக்கக்கூடிய விலையாக இருக்க முடியும்.”என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...