rtjy 242 scaled
இலங்கைசெய்திகள்

தொடருந்து மிதி பலகையில் தொங்கி சென்றவர் பலி

Share

தொடருந்து மிதி பலகையில் தொங்கி சென்றவர் பலி

ஹிக்கடுவை நோக்கி பயணித்த அதிவேக தொடருந்தின் மிதி பலகையில் பயணித்த நபர் ஒருவர் ஒளி சமிக்ஞை கோபுரத்துடன் மோதி பலத்த காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை வடக்கு மற்றும் களுத்துறை தெற்கு புகையிரத நிலையங்களுக்கு இடையில் களுத்துறை அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தொடருந்து பெட்டிகளில் அதிகளளவில் பயணிகள் இருந்தமையினால் மிதிபலகையில் வெளியில் தொங்கியபடி சென்ற போது ஒளி சமிக்ஞை கோபுரத்துடன் மோதி சுமார் 30 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து காயமடைந்த நபர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...