செய்திகள்இலங்கைபிராந்தியம்

செல்பி எடுக்க முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

Share
Selfie
Share

செல்பி எடுக்க முயன்ற இளைஞரொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

வவுனியா மதவாச்சி மன்னார் வீதி கல்லாற்றுப்பாலத்தில் இச்சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.

மன்னார் முருங்கன் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள், செட்டிகுளம் கல்லாறுப்பாலத்தில் ஏறி தங்களது கையடக்கத் தொலைபேசியில் செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது மன்னார் பியர் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்றுகொண்டிருந்த ரயிலில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏனையவர் பாலத்தின் கீழே குதித்து உயிர் பிழைத்துள்ளார்.

சம்பவத்தில் முருங்கன் பரியாரி கண்டல் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் கண்ணா (வயது 19) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...