pg4 1hhhh
இலங்கைசெய்திகள்

போக்குவரத்து விதிமீறல் – 1,25,000 ரூபா அபராதம்!

Share

மதுபோதையில் போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்றவருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிபதி நளினி சுகாதாரன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

அவர் மீது 7 குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து பொலிஸார் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தனர்.

அதன்படி மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை , காப்புறுதி பத்திரமின்மை , வரிப்பத்திரமின்மை, தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை, தலைக்கவசம் அணியாதவரை ஏற்றி சென்றமை மற்றும் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்து நீதிமன்று தீர்ப்பளித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 127
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்கு உதவ சீனா என்றும் தயார்: அக்குரானாவில் சீன மொழி மையத்தைத் திறந்து வைத்து தூதர் உறுதி!

இலங்கைக்குத் தேவைப்படும் போதெல்லாம் உதவுவதற்கு சீனா தொடர்ந்து ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதர் கி...

world 126
செய்திகள்உலகம்

ஈரானிய துறைமுக முற்றுகையை ஆதரிக்கவில்லை: இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு!

ஈரானிய துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள கடல்வழி முற்றுகை நடவடிக்கையை ஐக்கிய இராச்சியம் ஆதரிக்கவில்லை என்று...

world 125
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார், வவுனியா உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை !

இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பலத்த மின்னல் தாக்கங்கள்...

world 124
செய்திகள்உலகம்

உலகளாவிய வேலைவாய்ப்புச் சவால்: வளரும் நாடுகளுக்கு உலக வங்கித் தலைவர் முக்கிய அறிவுறுத்தல்

வாஷிங்டனில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகாலக் கூட்டங்கள் நடைபெறவுள்ள சூழலில், வளரும்...