rtjy 304 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

Share

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 22 நாட்களில் இலங்கைக்கு சுமார் 77,763 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் தினசரி சராசரி வருகை 3,534 ஆக பதிவாகியுள்ளதுடன் இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது முன்னேற்றத்தை காண்பிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டோபர் மாதத்தின் முதலாவது வாரத்தில் மொத்தம் 23,073 சுற்றுலாப்பயணிகளும், இரண்டாவது வாரத்தில் 23,434 இதே எண்ணிக்கை மூன்றாவது வாரத்தில் இன்னும் அதிகரித்து 31,265 ஆக பதிவாகியுள்ளது.

ஆனால், ஒக்டோபர் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டிருந்த 147,789 சுற்றுலாப்பயணிகள் என்ற இலக்கில் 53 சதவீத வருகையையே இலங்கை எட்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதங்களைப் போலவே, இம்மாதமும் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 26 சதவீத பங்களிப்பை வழங்கி இந்தியா முதலிடத்தையும் 9 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தினை ரஷ்யாவும், 8 சதவீத பங்களிப்புடன் ஐக்கிய இராச்சியம் மூன்றாம் நிலையிலும் உள்ளது.

மேலும், குறித்த வரிசையில் ஜெர்மனி, சீனா, அவுஸ்திரேலியா, மாலைதீவுகள், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...