சில அமைச்சர்கள் அரச செலவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டொன்றை இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண மறுத்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிலர் தமது சொந்த செலவில் தனிப்பட்ட செலவிலும் , சிலர் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கின்றனர்.
நானும் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் 02 வருடங்களாக எந்த வெளிநாட்டு பயணமும் மேற்கொள்ளவில்லை.
ஜனாதிபதி தனது வெளிநாட்டு பயணத்தின் போது குறைந்தளவான அதிகாரிகளை மட்டுமே அழைத்துச் செல்வதுடன், தமது சொந்த செலவில் வெளிநாடு சென்றுள்ளனர்.
அரசின் செலவுகளை குறைத்து வருகிறோம்.
#SriLankaNews