Gun Shot
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஒரே நாளில் மூன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்! – இருவர் பலி

Share

இலங்கையில் நேற்று மாத்திரம் மூன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கம்பஹா , மாக்கவிட்ட, குருச சந்தியில் 34 வயது வியாபாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரினால் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

பாதாள குழுவுடன் தொடர்புடைய கொலையாக இது கருதப்படுகின்றது.

அத்துடன், எல்பிட்டிய, உருகஸ்மன்ஹந்திய பகுதியிலும் 42 வயது நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்களில் வந்த ஒருவரே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இக்கொலையும் பாதாள குழுவுடன் தொடர்புபட்டது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, காலி, அஹுங்கல்ல, கட்டுவில பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் காயமடைந்து பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...