tamilni 9 scaled
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுமிகள்

Share

பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுமிகள்

பாணந்துறை, வாலான பிரதேசத்தில் இயங்கி வரும் சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று(01.11.2023) இடம்பெற்றுள்ளது.

தப்பிச் சென்ற மூன்று சிறுமிகளும் 13, 14 மற்றும் 16 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் பேருவளை, பிபில மற்றும் ராகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர் இல்லத்தின் பொறுப்பதிகாரி அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சிறுமிகள் இல்லத்தின் பொறுப்பதிகாரி அவர்கள் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளை கண்டெடுத்ததாகவும், உரையாடிய பின்னர் கைத்தொலைபேசிகளை தரையில் வீசிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...