பொலிஸ்மா அதிபரை தாக்கியோர் கைது!

arrest handdd

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் மேலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை கடந்த மே 10 ஆம் திகதி தாக்கினர் எனக் கூறப்படும் மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை மீறியமை, சட்டவிரோதமாக ஒன்று கூடியமை, குற்றவியல் நிர்ப்பந்தம் மற்றும் கடமையைத் தடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

31, 51 மற்றும் 52 வயதுடைய சந்தேகநபர்கள் மூவரும் பிடபெத்தர மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

#SriLankaNews

Exit mobile version