திருமலை கடற்படை முகாம் முற்றுகை!!

திருகோணமலையில் கடற்படை முகாம் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று அதிகாலை அலரி மாளிகை பகுதியிலிருந்து பாதுகாப்பு தரப்பினரால் போராட்டக்காரர்கள் அகற்றப்பட்ட நிலையில், மஹிந்த அலரிமாளிகையில் இருந்து தனது விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை வேளையிலேயே விமானப்படை ஹெலிகொப்டர் ஒன்றில் மஹிந்த, அவரது மனைவி ஷிரந்தி, மஹிந்தவின் மகன் யோஷித்த மாற்று மனைவி உட்பட சிலர் திருகோணமலைக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

லம்பிலிருந்த தப்பிச்ச சென்ற அவர்கள் திருகோணமலை கடற்படை முகாமின் கடற்படைத் தளபதிக்கான விருந்தினர் மாளிகையில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp Image 2022 05 10 at 1.37.02 PM 2

#SriLakaNews

Exit mobile version