mahinda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இடைக்கால அரசும் இல்லை; பதவியும் விலகமாட்டேன்! – மஹிந்த மீண்டும் அறிவிப்பு

Share

“நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு இடைக்கால அரசு தீர்வு அல்ல. அப்படிப்பட்ட அரசு தற்போது அமையவும் சந்தர்ப்பம் இல்லை.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தம்மிடம் நேற்றிரவு உறுதியளித்தார் என்று அவரின் சகாவும் முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தன எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“மகாசங்கத்தினர் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் பிரதமர் பதவியிலிருந்து தான் ஒருபோதும் விலகமாட்டார் என்றும், மக்கள் ஆணையின் பிரகாரம் அந்தப் பதவியிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை முன்நகர்த்துவார் என்றும் பிரதமர் எம்மிடம் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் 113 இற்கும் மேற்பட்டோரின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசுக்கு இருக்கின்றபோது பிரதமர் பதவியை எப்படி இராஜிநாமா செய்ய முடியும் என்றும் பிரதமர் எம்மிடம் கேள்வி எழுப்பினார்.

பிரதமரின் இந்த நிலைப்பாட்டை நாம் வரவேற்கின்றோம். அவர் அரசமைப்பை மீறிச் செயற்படவில்லை. மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து அரசமைப்பின் பிரகாரமே அவர் செயற்படுகின்றார். குறுக்கு வழியில் பிரதமரைப் பதவியிலிருந்து விலக்கிவிட்டு ஆட்சியமைக்கத் துடிப்போர் இதைக் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்” – என்றார்.

எனினும், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி சர்வகட்சி அரசை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய – தற்போது சுயாதீனமாகச் செயற்படும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நேற்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...