IMG 20220508 WA0039
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணை! – கொடிகாமத்தில் எதிர்ப்பு

Share

மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணைக்கு நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதுடன், தவறணையை அகற்றுமாறும் எதிர்பபு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து கொடிகாமம் பொலிஸார் தலையிட்டு கள்ளுத் தவறணை அமைப்பதற்கு தற்காலிக தடையை விதித்துள்ளனர்.

கொடிகாமம் வடக்கு மக்கள் வாழும் பகுதியில் கடந்த 10 வருடங்களாக கள் விறபனை நிலையமான கள்ளுத் தவறணை இயங்கி வருகிறது.

ஐந்து வருடங்களுக்கு தற்காலிகமாக இயங்குமெனத் தெரிவித்து ஆரம்பித்த தவறணை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கும் முகமாக நிரந்தர கட்டம் ஆரம்பிக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதனை அடுத்து குறித்த பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஒன்று சேர்ந்து எதிர்பினை வெளியிட்டனர்.

இப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டதனால் கொடிகாமம் பொலிஸார் தலையிட்டு எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் பேசி அவர்களின் வாக்குமூலத்தை பதிவுசெய்து கொண்டனர்.

வாக்குமூலத்தை பதிவுசெய்த பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த தவறணைக்கான கட்டடப் பணிகளை உடன் நிறுத்துமாறு தற்காக தடையை அறிவித்தார்.

மக்களின் வாக்குமூலத்திற்கு அமைய நாளையதினம் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தொடரப்படும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். அதுவரை கட்டட நடவடிக்கைக்கு தற்காலிகமாக நிறுத்துமாறு அறிவித்துள்ளார். இதனையடுத்து மக்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேறினர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

இந்தப் பகுதியில் வசிக்க முடியாதவாறு தகாத வார்த்தைப் பிரயோகம், வீதிகளால் மாணவர்கள், பெண்கள் செல்ல முடியாதவாறு மது போதையில் உள்ளவர்களின் அடாவடிகள் என பல வகையான இன்னல்களுக்குத் தாம் முகம் குடுப்பதாக பெண்கள் தெரிவித்தனர்.

10 வருடங்களாக இயங்கும் தவறணைக்கு மலசலகூடம் இன்மையால் மதுப்பிரியர்கள் வீதிகளில் சிறுநீர் கழித்தல் மற்றும் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளினால் வீதியால் பயணிக்க முடியவில்லை, அயலில் வசிக்க முடயவில்லை குறிப்பாக பெண்கள், மாணவர்கள் இப் பகுதியால் பயணிக்க முடியவில்லையென மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

IMG 20220508 WA0040

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...