Murder new 444
இலங்கைசெய்திகள்

திருவலையால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி! – அரியாலையில் சம்பவம்

Share

கணவன்– மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக திருவலை கட்டையால் அடித்து கணவனை மனைவி கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் துரைராசா செல்வராசா (வயது–32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.

மேசன் தொழிலில் ஈடுபடும் இவர் மனைவியுடன் சில நாள்கள் நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையிலேயே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவருகின்றது.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அதிகாலை வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து குறித்த குடும்பப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் உடலில் திருவலைக் கட்டையால் தாக்கப்பட்ட 5 க்கும் மேற்பட்ட காயங்கள் உள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...