Murder new 444
இலங்கைசெய்திகள்

திருவலையால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி! – அரியாலையில் சம்பவம்

Share

கணவன்– மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக திருவலை கட்டையால் அடித்து கணவனை மனைவி கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் துரைராசா செல்வராசா (வயது–32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.

மேசன் தொழிலில் ஈடுபடும் இவர் மனைவியுடன் சில நாள்கள் நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையிலேயே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவருகின்றது.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அதிகாலை வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து குறித்த குடும்பப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் உடலில் திருவலைக் கட்டையால் தாக்கப்பட்ட 5 க்கும் மேற்பட்ட காயங்கள் உள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...