dfsw
இலங்கைஅரசியல்செய்திகள்

குமுறலை வெளிப்படுத்துவதை விட வெளியேறுவதே துணிகரம்– காமினி லொக்குகே கொதிப்பு

Share

உள்ளே இருந்து உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துவதைவிட, அரசிலிருந்து வெளியேறிவிட்டு துணிகரமாக கதைப்பதே மேல்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், அமைச்சருமான காமினி லொக்குகே தெரிவித்தார்.

‘மக்கள் சபை’ எனும் தொனிப்பொருளின்கீழ் அரச பங்காளிக்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ சிலர் ஜனாதிபதியாக வேண்டும், தலைவராக வேண்டும் என்ற எதிர்கால ஆசையில் மக்களை குழப்பும் வகையில் கருத்துகளை முன்வைக்கின்றனர். அரசில் இருந்துகொண்டு எதிரணியின் வேலையை செய்வதற்கு முற்படுகின்றனர். அவ்வாறானவர்கள் அரசியிலிருந்து வெளியேறி விமர்சிப்பதே மேல். வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.” – என்றார்.

அதேவேளை, மொட்டு கட்சியின் மேலும் சில உறுப்பினர்களும் பங்காளிக்கட்சிகளை அரசிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...