கொரோனா தடுப்பூசியால் பாலியல் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என சர்வதேச ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட இதனை தெரிவித்துள்ளார் .
பொது மக்கள் சமூக ஊடகங்களில் அல்லது பிற ஊடகங்களில் பரவுகின்ற ஆதாரமில்லாத தகவல்களால் ஏமாறாது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுள்ளார் .
18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தயங்குவதாகவும் அதிலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசியை ஏற்க மறுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று, இந்த தடுப்பூசியை போட்டால் பாலியல் ரீதியான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு , இதன்மூலமாக குழந்தை பாக்கியம் இல்லாது போய்விடும் எனும் கருத்து சமூகத்தில் நிலவுவதாகும்.
அத்தோடு வெளிநாடு செல்வதற்கு காத்திருப்போர் குறித்த சில நாடுகளில் சினோபோர்ம் தடுப்பூசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே தடுப்பூசியை பெற தயங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் .
Leave a comment