thief 4 092713
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சமையலறைக்குள் புகுந்த திருடன் சம்பலையும் சோற்றையும் சாப்பிட்டு தப்பி ஓட்டம்!

Share

தாயும், மகளும் இரவு நேரத்தில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது, சமையலறைக்குள் புகுந்த நபரொருவர் சோற்றுப் பானையில் எஞ்சி இருந்த சோற்றையும் சீனி சம்பலையும் சாப்பிட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.

கேகாலை, தேவாலேகம, கெசல்வத்துகொட பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

வீட்டுக்காரப் பெண் தனது காணியில் வீடு ஒன்றை நிர்மாணித்த பின்னர் எஞ்சிய தென்னம் பலகைகளை குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் குவித்து வைத்திருந்துள்ளார்.

12 ஆம் திகதி இரவு குவித்து வைக்கப்பட்டிருந்த பலகைகளில் 10 பலகைகளை யாரோ திருடிச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளரான பெண் 13 ஆம் திகதி தேவாலகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

13 ஆம் திகதி இரவு தாயும் மகளும் சீனி சம்பலுடன் சோறு சாப்பிட்டுவிட்டு எஞ்சியதை காலை சாப்பிடவென வைத்துள்ளனர்.

சாப்பிட்ட பின்னர் இருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக சமையலறைக்குள் புகுந்த திருடன் எஞ்சிய சம்பலையும் சோற்றையும் சாப்பிட்டு விட்டு சென்றுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...