sauthi
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கை வருகிறது சவூதி குழு!

Share

சவூதி அரேபியாவின் வர்த்தக உயர் மட்ட பிரதிநிதிகள் குழு விரைவில் கொழும்பு வரவுள்ளது. வர்த்தகம், முதலீடு, விவசாயம் , மீன் வளர்ப்பு, சுரங்கத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறைகளில் ஒத்துழைப்புக்களை விரிவாக்கும் நோக்கில் இக்குழு இங்கு வரவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சவூதி அரேபியா சென்ற அமைச்சர் அங்கு முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டார். ரியாத் வர்த்தக சம்மேளனம், முஸ்லிம் உலக சம்மேளனம், மன்னர் சல்மான் அமைப்பு மற்றும் சவூதி வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்தார்.

முடிக்குரிய இளவரசர் சல்மான்பின் அப்துல் அஸீஸ் 2030 இல்,முன்னெடுக்கவுள்ள சுற்றுலா, வர்த்தகத்துறை மேம்பாடுகளில் இலங்கையையும் உள்வாங்குவதற்கான விருப்புக்களை அமைச்சர் நஸீர் அஹமட் இதன்போது வெளியிட்டிருந்தார்.

இதனடிப்படையில் இதற்கான முன்னோடிக் கள விஜயமாகவே சவூதி அரேபிய வர்த்தக உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கை வரவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...